மரு.கிருஷ்ணமூர்த்தி
*சான்றிதழ்*
தகைமைசால் செல்வர் திருவாளர் உயர்திரு . *A. மஹாலிங்கம்*
அவர்களுக்கு மனமகிழ்ந்து *நற்சான்றிதழ்* அளிப்பதில் மகிழ்வும் , பெருமிதமும் கொள்கிறேன் .பன்முகத் தன்மை பாராட்டும்நல்வகையில் பெற்றுள்ளவர் திரு.A. மஹாலிங்கம் அவர்கள். பட்டியலிட்டு காட்டும்படி , நான் அறிந்த அவர் ஒரு
1 சிறந்த படிப்பாளர்
2 கூர்த்த மதியாளர்
3 நல்ல சிந்தனையாளர்
4 அயராத உழைப்பாளர்
5 நெடிய அனுபவத்தார்
6 தேர்ந்த கல்வியாளர்
7 விடாமுயற்சிக்காரர்
8 சீரிய நிர்வாகத்திறத்தார்
9 நிறைந்த நேர்மைக்காரர்
10 உயர்ந்த பண்பாளர்
11 கனிந்த அன்பானவர்
12 எளிமையின் இடமானவர்
13 ஒருங்கிணைப்பு , ஊக்கம், விரைவு, செயலாக்கம், இணக்கம், உறுதி, குழு மனப்பான்மை கொண்ட வல்லவர்.
இத்தகு மேன்மையாளர் மருத்துவ சேவையில் நிர்வாகம் மற்றும் மேலாண்மை சார்ந்த துறையில் தனது மிக நீண்ட (25) இருபத்திஐந்து ஆண்டுகால அனுபவத்தை துணைக் கொண்டவர்.
அவர் முன்னின்று ஆசிரியராய், ஒருங்கிணைப்பாளராய், நன்கு நடாத்திய வகுப்பில் பயின்ற முன்னாள் மாணவர் என்றவகையில் இந்த நற்சான்றிதழ் வரைந்தளிப்பதை நல் வாய்ப்பாக கருதுகிறேன்.
அவர் மூளையில் கருவான குழந்தை TWIN TECH ACADEMY செழித்து, தழைத்து, ஓங்கி வளர்ந்து வெற்றிக்கனிகள் கொய்வதுவெள்ளிடை மலையே! உள்ளங்கை நெல்லிக்கனியே !
ஒப்பம்:
மரு.கிருஷ்ணமூர்த்தி மருத்துவர்,
நுண்கதிர் துறை தலைவர் மற்றும் பேராசிரியர்,
செட்டிநாடு மருத்துவ கல்லூரி கேளம்பாக்கம், சென்னை.